Tuesday, August 5, 2014

மீண்டும் மீண்டும் பிறந்தேன்

ஒரு கதை அல்லது கட்டுரை எழுதி ‌பல நாட்கள் கடந்துவிட்டது. எனது எண்ணங்களை ஏட்டில் ஏற்றி சில நாட்கள் நகர்ந்துவிட்டது. அடுத்து என்ன எழுதுவேன் , எதை எழுதுவேன் என்ற என் விசிறிகளின்  எதிர்பார்பிற்கிணங்க சுமார் கடந்த 30 நிமிடங்களாக பல விடயங்களை மனக்கண்முன் நிறுத்தி அதில் ஒரு சில நிகழ்வுகளுக்கு வரி வடிவம் கொடுத்து பலகையில் ஏற்றி விசிரிகளிடம் பகிர்ந்து பல நூறு "LIKES"களை வாங்கி, நானும் ஒரு எழுத்தாளன் என்ற போர்வைக்குள் படுத்துவிடவேண்டும் என்ற உயரிய லட்சியத்தில் எழுதிய படைப்பு இல்லை இது. என்ன எழுதுவது, எதைப்பற்றி எழுதுவது, எப்படி எழுதுவது என்ற சிந்தனை துளியும் இல்லாமல் இவ்வரிகளை கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மணிநேர சிந்தனைக்குப் பிறகும் எதுவும் உருப்படியாக தோன்றாததால், என்னை கோபமடையச்செய்த ஒரு எருமையைப் பற்றி  இங்கு கொட்டி மனதை ஆற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பக்கத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

கடிகாரத்தின் முள் மாலை ஐந்தை  தொட்டது, ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. அன்றும் வழக்கமான அலுவல்களுக்கிடையே அவ்வப்போது எனது கைப்பேசியின் திரையை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். சரி நேரம் ஆகும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு தேநீர் அருந்துவதற்காக எனது கணினியை பூட்டிவிட்டு நகர்ந்தேன். சரி ஐந்து நிமிடம்தானே என்று மிகவும் அலட்சியமாகவும், பயமேதும் இல்லாமல் தைரியமாக கைப்பேசியை எனது மேஜையின் மேலே வைத்துவிட்டு சென்றேன். எங்கே போனாலும் எப்பொழுதும் நியாபகமாய் எனது கைப்பேசியை எடுத்து செல்வது வழக்கம், ஆனால் அன்று சனி எனக்கே தெரியாமல் என் நடு மண்டையால் டிஸ்கோ அடிகொண்டிருந்ததை நான் அறியவில்லை.

நான் என் இடத்தை விட்டு நகர்ந்த இரண்டாவது நிமிடத்தில் சனி தனது வேலையை மிக சரியாக ஆரம்பித்தான். எனது பாலைப்போன கைப்பேசி மிகச் சரியாக அலைகளை பெற்று ஒலித்துக்கொண்டிருந்தது. விரைவாக தேநீர் அருந்திவிட்டு என் மேஜைக்கு அருகில் வரும்பொழுதுதான் நான் என் கைப்பேசி அலறலை கேட்டேன். நான் கைப்பேசியை தொடும் முன்பே அந்த அழைப்பு நின்றுவிட்டது. ஆம் நான் எதிர்பார்த்த என் மனைவியின் அழைப்பு நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில், அவ்வளவுதான் அலறியது என் கைப்பேசி மட்டும் அல்ல எனது மனமும் உடலுந்தான்.

அனைத்து தெய்வங்களையும் மனதில் ஒரு கணம் நினைத்துக்கொண்டு உறைந்துபோன கைகளுடன் கைப்பேசியை எடுத்து என் மனைவியின் கைப்பேசி எண்னைத் தொடர்புகொண்டேன். கைப்பேசி மணியுடன் சேர்ந்து என் மனமும் ஒலித்தது, எதிர் முனையில் என் மனைவியின் குரலும் ஒலித்தது. இக்கால கணவன்களுக்கே உரிய பவ்யத்துடன் "மானே தேனே பொன் மானே" என்றெல்லாம் டுபாகூர்விட்டு சமாளித்துவிடலாம் என்ற கானல் ஆசையுடன் நான் பேசுவதற்கு தயாரானேன். எவர் செய்த புண்ணியமோ , நான் வேண்டின தெய்வம் எண்னை இம்முறை காப்பாற்றிவிட்டது. ஆம் என் மனைவி அன்று அணிந்திருந்த உடை மிக பிரமாதம் என்று அவளுடை தோழி ஒருத்தி காலை ஒன்பது மணிக்கு தந்த பாராட்டினால் மாலை ஐந்து மணிக்கும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருந்த  காரணத்தினால் நான் அவளது கைப்பேசி அழைப்பை தவறவிட்டதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மனதிற்குள்ளேயே கடவுள்களுக்கு ஒரு பெரிய நண்றி சொல்லிக்கொண்டு அழைப்பிற்கானக் காரணத்தை அறியும் தொனியில் அவளிடம் பேசினேன்.
அன்றைய அலுவலக வேலைகள் அனைத்தையும் முடித்து விட்ட காரணத்தினால் எண்னை புறப்பட்டு வருபடி கட்டளை இடுவதற்காக வந்த அழைப்பு என்பதை உடனே புரிந்துகொண்ட நான், என் பணிகளை முடிப்பதற்கு இன்னும் சில நேரம் ஆகும் என்பதை சொல்வதற்கு தைரியம் இல்லாத காரணத்தினாலும், அப்படியே ஏழு மலையான் புண்ணியத்தோடு தைரியத்தை வரவழைத்து சொன்னாலும் கூட அதை சற்றும் சட்டை செய்ய மாட்டாள் என்ற சத்தியத்தை நன்கு உணர்ந்த ஞானத்தினாலும் மறு வார்த்தை கூறாமல் இன்னும் பத்து நிமிடத்தினுள் உனது அலுவலக சுற்றுச்சுவர் கதவருகே இருப்பேன் என்ற உறுதி மொழியுடன் அவளிடம் இருந்து விடை பெற்று கைப்பேசி அழைப்பை துண்டித்தேன்.
மனதில் ஒரு இணம் புரியாத மகிழ்ச்சி. ஏன் இருக்கக் கூடாது? தலைக்கு வந்தது தலைப் பாகையுடன்  போனது என்பது இதுதானோ. இந்த பழமொழிக்கானக் காரணத்தை உணர்ந்தேன் அந்த நொடியில். ஆம் எண்னை போன்ற எவனோ ஒருவன் தன்  இல்லாளின் கோபமென்னும் அக்ணிக்  கணையில் இருந்து தப்பியப்பின் உதிர்த்த பல பொன் மொழிகள் என்று.

அந்த மகிழ்ச்சி தந்த உற்ச்சாகத்தில் எனது இரண்டு சக்கர வாகணத்தின் இயக்கி பொத்தானை அழுத்தி இரண்டே நிமிடத்தில் ஏன் அலுவலக முக்கிய வாசலினை கடந்தேன். பொதுவாக 7 நிமிடப் பயண தூரத்தில்தான் இருக்கிறது என்னவள் பணிபுரியும் அலுவலகம். நான் பத்து  நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லி இருந்த காரணத்தினால் எந்த ஒரு படபடப்பும் இல்லாமல் "என்றென்றும் என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்" என்று அலைபாயுதே படத்தில் வரும் பாடலை அசைப்போட்டுக்கொண்டு வாகணத்தை இயக்கிகொண்டிருக்கும் தருணத்தில் மனதில் ஒரு இணம் புரியாத பயவுணர்வின் ஆர்ப்பாட்டதை உணர்ந்தேன்.

வாகணத்தின் முகப்பு விளக்கினை ஒளிவூட்டுவதற்கான பொத்தானை தேடியபொளுதுதான் கவனித்தேன் எனது இரு சக்கர வாகணத்தின் எரிபொருள் இன்னும் சற்று நேரத்தில் உறங்கி விடும் என்று. எண்ணவளின் அலுவலகமோ இன்னும் இரண்டு நிமிடப் பயண தொலைவில்தான் உள்ளது. ஏற்கனவே ஐந்து நிமிடம் கடந்த விட்டது, ஆனால் இன்னும் ஐந்து நிமிடம் இருகின்றதே என்ற தைரியத்தில் மிகவும் மன உறுதியுடன் அருகில் உள்ள ஏறிபொருள் நிரப்பும் கிடங்கிற்கு சென்று வாகணத்தின் பசியை முழுவதும் ஆற்றிவிட்டு அங்கே இருந்து கிளம்புவதர்க்குள் மூன்று நிமிடங்கள் கரைந்தன.

எப்படிப்  பார்த்தாலும் சரியாக இன்னும் இரண்டு நிமிடத்தில் நான் குடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடலாம் என்ற நேர்மறைச் சிந்தனையினால் எனக்கு நானே ஒரு சாபாஷ் சொல்லிக்கொண்டு வானகனத்தை விரைவாக செலுத்தினேன். வாகணத்தின் வேகத்தை கூட்டும் முன்பே ஒரு நாட்டு எருமை மிகச் சரியாக அதன் பின் புறத்திணை கொண்டு என் வண்டியினை வழிமறித்த காரணத்தினால் நான் சற்று நிலை தடுமாறி வாகனத்தோடு சரிந்தேன். நல்ல வேலையாக சிறிய சிராய்ப்புகளுடன் தப்பித்தேன். எப்பொழுதும் மிதமான வேகத்தில் செல்லும் பழக்கம் உள்ளதனால் என்னால் சமாளிக்க முடிந்தது, ஆனால் இந்த உலகமோ நான் தப்பித்து என் மனைவியின் மாகல்ய பாக்கியம் என்று அந்தப் பெருமையையும் அவளுக்கே தந்தது. இதுவே எதாவது விபரிதம் நடந்திருந்தால் "மென்பொருளில் வேலை செய்யும் வாளிபன்தானே, எவளோ ஒருத்தியின் நினைவில் வண்டி ஓட்டிவந்து இப்படி விழுந்துவிட்டான்" என்று வசைப் பாடி ஒரு சிற்றின்பம் அடைந்திருக்கும், என்ன செய்வது ஆண் மகனாக பிறந்தாளே இதையெல்லாம் அனுபவித்தே ஆகவேண்டும் போல. அதுவும் மென்பொருளில் வேலை செய்யும்  ஆண் என்றால் சொல்லவேத் தேவையில்லை! உலகில் உள்ள அனைத்துப் பலிகளையும் சுமந்தே ஆகவேண்டும் என்ற உலக நியதியை நினைத்து நொந்துகொண்டே எனது வண்டியை மீண்டும் இயக்க முனைந்தேன்.
சுயநினைவிர்க்கு வந்தவுடன்தான் நியாபம் வந்தது விபத்தில் தப்பியது பெரிதில்லை இனிமேல்தான் வரப்போகிறது பெரிய கண்டம் என்று. ஆம் காலத்தின் வாய்தனில் பத்து நிமிடங்கள் அறைந்துவிட்டான. நக்கீரன் போல் வந்ததே கோபம் எனக்கு, என்ன செய்வது அந்த எருமைக்கு மணைவி இருக்குமாயின் என் மனவேதனை புரிந்திருக்கும், என்னைத் தூக்கி கொண்டு மிக வேகமாக என் மணையிடம் சேர்த்திருக்கும். போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கும் போல், இஜ்ஜென்மத்தில் எருமையாக பிறப்பதற்கு.    

சரி நடப்பது நடக்கட்டும், எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு வேலை சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு துணிக்கடைக்கோ    அல்லது முக அலங்காரம் அகாடிக்கோ கூட்டிச்சென்று சமாளித்துவிடலாம் என்று ஒரு என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டு அவளின் அருகே சென்று அசைய முடியாமல் அசையாது போல் நடித்துக்கொண்டே வாகனத்தினை நிறுத்தி கீழ் இறங்கினேன். நான் நினைத்ததுபோன்றே மிகவும் சூடான எண்ணையில் விழுந்த காடுபோல் அவளது நெஞ்சம் பொரிந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் காதில் கேட்பதற்கு வேண்டுமானால் "ஏன் இவ்வளவு தாமதம்"  என்கிற வார்த்தை  மிக சாதாரணமாக இருக்கலாம் ஆனால் மணைவியை அழைக்கப்போகும்  ஒவ்வொரு கனவனுக்கும்  மட்டுமே தெரியும் அந்த சொல்லின் வலிமையையும் வீரியமும்.

நான் வேண்டும் என்றே நேரம் கடத்தவில்லை, நான் சொல்வதற்கு தயவுகூர்ந்து இரண்டே இரண்டு நிமிடம் குடு குட்டிம்மா, புஜ்ஜி, பட்டு என்று இன்னும் சில செல்ல மொழிகள் உதிர்த்த பின்பு, நடந்தவற்றை கூறினேன். ஏன் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக அவளிடம் கோபம் சற்றே அதிகமாக தலைதூகிற்று, "எருமை கண்ணு தெரியவில்லை" என்று அவளின் பட்டுதடுகளின் வழியே வழிந்தது வசைத்தேன். ஆம் ஒவ்வொரு ஆணும் அவன் மனைவியின் வசையைக்கூட தேனாகவே சுவைக்கின்றான் திருமணமான புதிதில். மன்னித்துவிடு சரியாக கவனிக்கவில்லை என்று நான் கூறியதுதான் தாமதம், அய்யய்யோ நான் உங்களை எருமை என்று சொல்லவேணா; கடவுளே! கடவுளே. நான் எருமைக்கு சரியாக கண்ணு தெரியவில்லை என்று சொன்னேன் என்று சிலேடையில் முடித்தால். எப்படியோ ஒரு வழியாக சமாளித்துவிட்டோம் என்று மறு மூச்சு விட்டு அங்கே இருந்து என்னவளை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தேன். நல்ல படியாக வீடு சேர்ந்தாலும் மணம் உறங்க மாறுகிறது, அந்த எருமையை ஏதாவது செய்ய வேண்டும் என்று புலம்பலாயிர்று.

கடவுளை வேண்டிக்கொண்டு "அடுத்த ஜென்மத்தில் நீ ஒரு மனிதனாக பிறந்து, மணைவி பெற்று நான் அடைந்ததை நீயும் அடைவாய்" என்று அந்த எருமைக்கு சாபமிட்டுக்கொண்டு என்மனதின் கோபத்திற்கு சமாதி கட்டி உறங்கினேன்.

யாருக்குத் தெரியும், போன ஜென்மத்தில் யார் விட்ட சாபமோ இஜ்ஜென்மத்தில் நான் மனிதனாக பிறந்ததற்கு.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...