Thursday, July 10, 2014

டெய்லி 10 டு 12 லட்சம்

தொலைக்காட்சி தொடர் எல்லாமே தயாரிப்பாளருக்கும், டிவி சானலுக்கும் காசு கொட்டும் தொழிலாக மாறிவிட்டது . கலாச்சார சீரழிவு.... ரெண்டு பொண்டாட்டி போய் இப்பலாம் 3 பொண்டாட்டி இருக்காம் தொடர்களில்... பெண்களுக்கு ரெண்டு கணவன்கள் எல்லாம் சர்வ சாதாரணம் தொடர்களில்... நல்ல குடும்பத்தை கெடுப்பது, சொத்தை கொள்ளை அடிப்பது, அடுத்தவன் வாழ்க்கையில் அடிப்பது இவை எல்லாம் மட்டும்தான் தொடர்களில் இப்ப ஒளிபரப்பாகின்றன. நல்லது எதுவுமே இல்லை....சில டிவி சானல்களை மூடியே கூட விடலாம்... அந்த அளவுக்கு அவைகளில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்கள்... தொடர்கள்... முடியவே முடியாத நெடுந்தொடர்கள்... இதுல அதுக்கு நம்பர் ஒன் டிவி சேனல் என்ற பட்டம் வேற. ஏழை மக்களும் நடுத்தர மக்களும் விடும் அந்த கண்ணீர அவங்க அப்படியே சிந்தாமல் சிதறாமல் காசாக்கி விடுகிறார்கள்... டெய்லி 10 டு 12 லட்சம், தொடர் தயாரிப்பளருக்கு மிச்சம் ஆகிறதாம்... இதே மாதிரி டிவி கம்பெனிக்கு, விளம்பர காசு எத்தனை கோடி என்று தெரியவில்லை... உங்க கண்ணீரோட விலை என்ன என்று உங்களுக்கு தெரியுமா.யோசியுங்க மக்களே ..... உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு கோடிகளை உங்களிடமிருந்து லபக்கி விடுகிறார்கள்...எந்த டிவியிலும் உருப்படியான, நல்ல, சமூகத்துக்கு தேவையான நிகழ்ச்சிகளே இல்லை. ஒரு சில சானல்கள் மட்டும் அழுது வடியும் தொடர்களை முற்றிலும் தவிர்த்து விட்டு நிகழ்ச்சிகளை தருகின்றன. ஆனால் மக்கள் அவற்றை பார்ப்பதில்லை.... மக்களே மாறுங்கள்....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...