Friday, January 8, 2016

சரசுவதி சமண தெய்வமா ?

ஒரு அரசோ, மதமோ கட்டமைக்கப்படும்போது அதை சுற்றி / எதிர்க்கும் யாவும் அதனுள் கரைக்கப்படும் என்பது வரலாற்று நியதி.

அப்படித்தான் நம் நாட்டில் பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன சில தெய்வங்கள் வேறு பெயரில் புதிதாக பிறந்தன. திராவிட தெய்வமானமூதேவி மதிப்பிழந்து இரண்டு நூற்றண்டுக்குப்பின் சரஸ்வதி என்ற "வைதீக பெண் தெய்வம்" கோவிலுக்குள் நுழைக்கப்படுகிறது. 




தோற்றத்தில் வெள்ளை சேலை உடுத்திய சரசுவதி சமண மரபில் பிறந்தவாக்தேவி ( சொற்களின் தலைவி ) என்று தொ. ப குறிப்பிடுகிறார். இத்தெய்வம் சிந்தாமணி காப்பியத்தில் நாமகள் என்று குறிப்பிடப்படுகிறது. சமண மதத்திலிருந்து வைதீகத்தால் உருமாற்றம் செய்யப்பட்ட தெய்வம் சரஸ்வதி ( சரஸ் - பொய்கை பொய்கையில் வெள்ளை தாமரையில் வசிப்பவள் ) என பெயரிட்டப்பட்டு சைவ கோயிலில் நுழைக்கப்படுகிறாள்.

சமணர்கள்தான் முதலில் பள்ளி வைத்து கல்வியை போதித்தவர்கள். பல சமண பள்ளிகள் இன்று வைதீக கோவிலாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணம் திருச்சி மலைக்கோட்டை (திரு -சிறார்- பள்ளி ) என்று அழைக்கப்பட்ட சமண கோயிலாகும்.

அதைபோல் விலை நிலத்தின் மூல காரணமான மூதேவி மதிப்பிழந்து பேரரசுகள் உருவாகும்போது செல்வத்திற்கும் விளைந்த நெல்லிற்கும் தெய்வமான இலக்குமி ( திருமகள் ) என்ற தெய்வம் உருவாக்கப்பட்டது.

செவ்வி : சமயங்களின் அரசியல் தொ.ப

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...