குளிர்ச்சியான தட்பவெப்பமும், மலை முகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்களும், மனதுக்கும், கண்களுக்கும், விருந்து படைப்பவை. இம்மலைக்கு செல்லும் பாதை, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அவற்றில் சில அபாயகரமானவை.
இங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. புலவர்களால் பாடப்பெற்றது. கொல்லிமலையும் சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மலையே. இதை ஆண்ட வல் வில் ஓரி, கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது வீரமும், கொல்லிமலையின் இயற்கை வளமும் சங்கப்பாடல்களில் இருக்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத கோவில்களும், ஆசிரமங்களும், மூலிகை சிகிச்சை மையங்களும் நிறைய இருக்கின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கொல்லி மலையின் ரகசியங்களில் முக்கியமானது, கொல்லிப்பாவை. சித்தர்கள் தவம் செய்யும்போது இடையூறு செய்த அரக்கர்களை விரட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கை இப்பகுதி மலை மக்களிடம் இருக்கிறது.
இங்குள்ள வனம், அடர்த்தி குறைந்தது. காட்டுப் பன்றியும் குரங்குகளும் மட்டுமே பிரதான விலங்குகள். கரடி இருந்ததாக ஓரிருவர் கூறியதுண்டு. ‛கொல்லிமலை சிங்கம்’ என்றொரு சினிமா கூட சமீபத்தில் வந்தது. அதைப்பார்க்கும் யாராவது கொல்லிமலையில் நிறைய சிங்கங்கள் திரிவதாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல்
கொல்லிமலையின் முக்கிய கிராமமான செம்மேட்டில், வல் வில் ஓரியின் சிலை இருக்கிறது. ‛இந்த சிலைக்கு மாலை போட்டால் பதவி பறிபோய்விடும்’ என்றொரு மூட நம்பிக்கை எப்படியோ பரவி விட்டது. அதனால், கொல்லிமலையில் வல் வில் ஓரி விழாவுக்கு சென்றாலும், சிலைக்கு மாலை போடாமல் பயந்தடித்து ஓடுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஒரு சில கலெக்டர்களும், அவ்வாறே ஓடியதை கண்டிருக்கின்றேன். இத்தனைக்கும், அது ஒன்றும் பழங்கால சிலை கூட அல்ல, சில தலைமுறைகளுக்கு முன் நிறுவப்பட்டதே..
கொல்லிமலையின் மிகப்பெரும் ரகசியம், சித்தர்கள் வாழ்ந்ததாக கூறுவது. ‘இப்போதும் வாழ்கிறார்கள், சாதாரண மனிதர்கள் கண்களுக்கு புலப்பட மாட்டார்கள்’ என்றெல்லாம் கட்டுக்கதைகள் நிறைய உலவுகின்றன. அதை அங்கு வசிக்கும் மலை மக்கள் பலர் நம்புகின்றனர்.
இங்குள்ள சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றால், நீர் வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம். முன்பெல்லாம் சரியான படி வசதியின்றி மக்கள் சிரமப்பட்டனர் இப்போது பிரமாதமான படிகள் அமைக்கப்பட்டு விட்டன.
கலெக்டராக சுந்தரமூர்த்தியும் அவரை தொடர்ந்து சகாயமும் இருந்தபோது கொல்லிமலை மேம்பாட்டுக்காக பெருமுயற்சி எடுத்தனர். ஏரி கூட அமைக்கப் பட்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போல் அல்லாமல், நெரிசலற்ற, அமைதியான மலை வாழிடம் இது. தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. சேலம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து கொல்லிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கொல்லிமலையில் பாக்சைட் மணல் எடுக்க அனுமதி வழங்கியதுதான் அதன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமைந்து விட்டது. அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு பல இடங்களில் மலை முகடுகளை மொட்டையாக்கி விட்டார்கள். சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக நிலைமை மோசமாகாமல் தவிர்க்கப் பட்டிருக்கிறது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.
கொல்லிமலையில் இருந்த வன அதிகாரி ஒருவர், ஒரு நாள் போனில் அழைத்தார். ‘சார், மலைக்கு போட்டோகிராபரோட வரமுடியுமா’ என்றார். சென்றோம். அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அடர்ந்த காப்புக்காட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
‘பாருங்க சார்’ என்று அவர் காட்டிய இடத்தில், ஆழமான குழி இருந்தது. மூன்றடி விட்டம் கொண்ட அந்த குழியின் ஆழம் 20 அடி இருக்கும். அதேபோன்ற குழிகள் வனத்துக்குள் இன்னும் பல இடங்களிலும் இருந்தன. எல்லாம், மலையில் இருக்கும் கனிம வளத்தை கண்டறிவதற்கான சட்ட விரோத முயற்சியின் அடையாளங்கள்.
‘எனக்கு முன்னாடி அதிகாரிங்க சப்போர்ட்ல இப்படி செஞ்சிட்டாங்க சார். இதை கண்டுபிடிச்சு ரிப்போர்ட் செஞ்ச சில வாரத்துல என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார்.
கொல்லிமலையில் ரகசியங்கள் ஏராளம். கொல்லிப்பாவையும், சித்தர்களும் தவிர்த்த ரகசியங்களில், பாக்சைட் மணல் எடுப்பவர்களின் மாயமந்திர அதிகாரம் முக்கியமானது.